Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2024
  • ஆஷியானா வாத்சல்யா: சென்னையில் சினியர் சிட்டிசன்களுக்கான பிரீமியம் குடியிருப்புகள்

ஆஷியானா வாத்சல்யா: சென்னையில் சினியர் சிட்டிசன்களுக்கான பிரீமியம் குடியிருப்புகள்

admin February 28, 2024
Ashiana Vatsalya: Chennai to get premium residences for senior citizens

Ashiana Vatsalya: Chennai to get premium residences for senior citizens

ஆஷியானா வாத்சல்யா: சென்னையில் சினியர் சிட்டிசன்களுக்கான பிரீமியம் குடியிருப்புகள்
ஆஷியானா வாத்சல்யா: சென்னையில் சினியர் சிட்டிசன்களுக்கான பிரீமியம் குடியிருப்புகள்

சென்னை 26 பிப்ரவரி 2024: முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பரான ஆஷியானா, சென்னையில் சீனியர் சிட்டிசன்களுக்கான பிரத்யேக பிரீமியம் குடியிருப்பு திட்டமான ஆஷியானா வத்சல்யாவை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. பரந்து விரிந்த 17.9 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகிவரும் ஆஷியானா வத்சல்யா ஆனது, ஓய்வூதிய வாழ்க்கையை மறுவரையறை செய்யும் வகையில் பிரீமியமான சீனியர் சிட்டிசன்களுக்கான சமூகத்தை கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த திட்டம் மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியின் உள்ளே 6.3 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அதோடு, 41,900 சதுர அடிக்கு கிளப்ஹவுஸுடன் டைனிங், ஜிம், நீச்சல் குளம் வசதிகளுடன் அமைந்துள்ளது. முதல் கட்டத்தில் மொத்தம் 258 யூனிட்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக ரூ.400 கோடி செலவில் உருவாகிவரும் இந்த முயற்சியானது, நிறுவனத்தின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற வாழ்க்கை அனுபவங்களை வழங்குவதற்கான உறுதிமொழியின் பிரதிபலிப்பாகும்.

ஆஷியானா வாத்சல்யாவுக்கான நிலம் நிரந்தர குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. முழு திட்டமும் 8 ஆண்டுகளில் கட்டப்பட்டு 5 கட்டங்களாக வழங்கப்படும், ஒவ்வொன்றும் சுமார் 2 முதல் 2.5 ஆண்டுகளில் முடிக்கப்படும் என்பது கூடுதல் தகவல்.

“அஷியானா வத்சல்யாவுடனான இந்தப் பயணத்தைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது சீனியர் சிட்டிசன்களுக்கான பிரத்தியேகமான பிரீமியம் குடியிருப்பு மையத்தை உருவாக்குவதில் சிறந்து விளங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்புக்கான சான்றாகும்.” என்று அஷியானா ஹவுசிங் இணை நிர்வாக இயக்குநர் அங்கூர் குப்தா தெரிவித்தார். மேலும் கூறுகையில் “இந்த திட்டத்தின் மூலம், நாங்கள் தரநிலையை உயர்த்துவதையும், ஓய்வூதிய வாழ்வில் புதிய வரையறைகளை அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஆஷியானா வத்சல்யாவுக்கான முதலீடுகளானது முதன்மையாக உள் அமைப்புகள் மூலமாகவே நிதியளிக்கப்படுகிறது, மேலும் 8-10% கடனுடன் கூடுதலாக வழங்கப்படுகிறது.” என்று கூறினார்.

“இந்த திட்டத்துக்கான ‘ஷோ ஹோம்’ வெளியிடுவதில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் ஆஷியான வத்சல்யாவில், முதியவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதையும், அவர்களின் பொன்னகரமான வருடங்களை மன அமைதியுடன் அனுபவிக்கவும் நிறுவனம் நோக்கமாக உள்ளது என்பதை அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன்.

பிரீமியம் வாழ்க்கை முறையைத் தேடும் பயனர்களை இலக்காகக் கொண்டு, ஆஷியானா வத்சல்யா பல தனித்துவமான விற்பனை அம்சங்களைக் கொண்டுள்ளது, இது சந்தையில் உள்ள பிற சலுகைகளிலிருந்து தனித்து நிற்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், 66% அடுக்குமாடி குடியிருப்புகள் மூன்று பக்கங்களிலும் திறந்திருக்கும், போதுமான காற்றோட்டம் மற்றும் இயற்கை ஒளியை வழங்கும். கூடுதலாக, 55% அடுக்குமாடி குடியிருப்புகள் அருகிலுள்ள ஏரியின் ரம்மியமான காட்சிகளை வழங்கும், இது குடியிருப்பாளர்களுக்கு அமைதியான மற்றும் அழகிய சூழலை உருவாக்கும். இது முழுமையான வாழ்க்கையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது, சீனியர் சிட்டிசன்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக வடிவமைக்கப்பட்ட கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் ஆரோக்கிய இடங்களையும் வழங்குவது சிறப்புமிக்கது.

நிறுவனத்தின் முந்தைய திட்டங்களின் வெற்றியின் அடிப்படையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது, அங்கு 900 யூனிட்கள் விற்றது நினைவுக்கூறத்தக்கது. அதன்படி, ஆஷியானாவின் வலுவான சாதனைப் பதிவு, திட்டத்தில் இடம்பெறும் அட்டகாசமான அம்சங்கள் மற்றும் நன்கு வளர்ந்த சமூகத்தில் முதன்மையான இடம் ஆகியவற்றுடன் இணைந்து, வருங்கால வாங்குபவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

ஆஷியானா ஒரு முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனமாகும். இது நவீன வாழ்க்கையை மறுவரையறை செய்யும் புதுமையான மற்றும் நிலையான வாழ்க்கைக்குரிய இடங்களை வடிவமைப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. தரம் மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கான வலுவான அர்ப்பணிப்புடன், பங்குதாரர்கள் மற்றும் சமூகங்களுக்கு நிலையான மதிப்பையும் தரத்தையும் தொடர்ந்து வழங்கிவருகிறது.

Post navigation

Previous Ashiana Vatsalya: Chennai to get premium residences for senior citizens
Next காவேரி மருத்துவமனை ரேடியல் ரோட்டில் ‘மா காவேரி கருத்தரிப்பு மையம்’ தொடக்கம்

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.
You cannot print contents of this website.