சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி,

அந்தமானில் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். இது 45 கி.மீ., வரை வேகத்தில் இருக்கும். எனவே, மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது பாதுகாப்புடன் செல்லவேண்டும்.
பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும். உள் தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி வரை அதிகமாக இருக்கும். வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

Uncategorized
Comments (0)
Add Comment