திருமாவளவனை விரட்டி அடித்த லண்டன் ஈழ தமிழர்கள் பணம்தானே வேணும் பொறுக்கிக்கோ

லண்டனில் பணம்தானே வேணும் பொறுக்கிக்கோ விட்டெறிந்து திருமாவளவனை விரட்டி அடித்த ஈழ தமிழர்கள்!

லண்டன் :

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திருமாவளவன் லண்டன் சுற்றுலா சென்றிருக்கிறார். தமிழ் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றிருந்த திருமாவளவனுக்கு விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ஜோசப் மெக்கேலா என்பவர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது கூட்டத்தில் சுமார் 100 தமிழர்கள் இலங்கை தமிழர்கள் உட்பட அனைவரும் பங்கேற்றனர். கூட்டத்தில் பேச தொடங்கிய திருமாவளவன் இந்துயாவில் மதவாத சக்திகள் அதிகரித்து விட்டார்கள். தொடர்ந்து பல்வேறு இன்னல்களை அவர்களால் அனுபவித்து வருகிறோம். இதற்கு முடிவு கட்டி தமிழர்களின் கலாச்சாரத்தை, பண்பாட்டை காக்க விடுதலை சிறுத்தை கட்சிக்கு நிதி உதவி அளியுங்கள் என்று கேட்டு கொண்டிருந்தார்.

அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த இலங்கையை சேர்ந்த ஆறுமுகம் என்ற ஈழதமிழர், உன்னை போன்ற ஆட்களால்தான் தமிழ் இனமே அழிந்தது. எங்கள் மக்கள் அழிவிற்கு காரணமான தி.மு.க, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்த துரோகி நீ, நிச்சயம் உன்னை போன்ற ஆட்கள் இருப்பதால்தான் இலங்கையில் நாங்கள் அழிந்தோம். இனி, இந்தியாவில் உள்ள தமிழர்களையாவது விட்டுவை. பணம்தானே உனக்கு வேணும்? பொறுக்கிக்கொள் என்று பணத்தை விட்டெறிந்தார்.

மேலும் தமிழர்களை இனி ஏமாற்றி உங்களால் மதமாற்றம் செய்யமுடியாது. ஒழுங்காக ஓடிவிடு என்று திட்டி தீர்த்துவிட்டார். இந்த வீடியோ பிரத்தியேகமாக கிடைத்தது. தற்போது தமிழர்கள் அனைவரும் தீவிரமாக மதமாற்றத்தை எதிர்க்க துணிந்துவிட்டார்கள்.

Uncategorized
Comments (0)
Add Comment