ரகுல் பிரீத் சிங் சொன்னதை நான் செய்த பிறகு பேசிய சம்பளத்தை தர வேண்டும்

ரகுல் பிரீத் சிங் அளித்த பேட்டி வருமாறு:-

தினமும் புதிய முயற்சி செய்ய வேண்டும். நேற்று மாதிரியே இன்றும் நடந்தால் அதில் என்ன விசேஷம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது செய்வேன். அதுதான் சினிமாவில் இத்தனை நாட்களாக என்னை வைத்து இருக்கிறது. ஆரோக்கியத்துக்கும், உடற்பயிற்சிக்கும் முன்னுரிமை கொடுப்பேன். நான் சாப்பாட்டு பிரியை. எவ்வளவு சாப்பிடுகிறேனோ அதற்கேற்ப உடற்பயிற்சி செய்வேன். சம்பள விஷயத்தில் நான் கறார் என்று பலரும் பேசுகிறார்கள். எனக்கு கொடுத்த கதாபாத்திரத்துக்கு எவ்வளவு உழைக்க வேண்டுமோ அவ்வளவு உழைக்க தயாராக இருக்கிறேன்.

எவ்வளவு சம்பளம் தர முடியும் முடியாது என்பதை முதலிலேயே சொல்லி விட வேண்டும். பேசியபடி சம்பளத்தை தர மறுத்தால் ஏற்க மாட்டேன். அது எனக்கு பிடிக்காத விஷயம். அவர்கள் சொன்னதை நான் செய்த பிறகு பேசிய சம்பளத்தை தர வேண்டும். இதை வைத்து சம்பள விஷயத்தில் கெடுபிடியாக இருக்கிறேன் என்று விமர்சித்தால் கவலைப்பட மாட்டேன்.

Uncategorized
Comments (0)
Add Comment