தாய்லாந்தில் 15 வயதுச் சிறுமியால் புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய நாய்க்கு பாராட்டுகள் குவிந்துள்ளன

.

ரட்சசீமா மாகாணத்தில் உள்ள பண்ணை ஒன்றில் முறை தவறிப் பிறந்த ஆண் குழந்தையை, அந்த சிறுமி குப்பை கூளங்களுக்குள் புதைத்துச் சென்றுள்ளார்.

அந்த வழியாக வந்த பிங்பாங் என்ற நாய் மோப்ப சக்தியால் கண்டறிந்து, குப்பை கூளங்களை தோண்டி எடுத்தவாறே பலமாகக் குறைத்தது.

நாயின் உரிமையாளரும், அப்பகுதி மக்களும் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை ரகசியமாகக் பெற்ற சிறுமியைக் கண்டுபிடித்து கைது செய்த போலீசார், அவர்மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
.

Uncategorized
Comments (0)
Add Comment