நடிகை ரம்யா கிருஷ்ணனை பார்த்து பொறாமைப்படும் நடிகை குஷ்பு

ரம்யா கிருஷ்ணன் புகைப்படம் குறித்த குஷ்புவின் வித்தியாசமான பாராட்டு இணையத்தில் ஒட்டுமொத்தமாக கவர்ந்துள்ளது.

பிரபல புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம், தென்னிந்தியா நடிகைகளை வைத்து சமீபத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். சமந்தா, ஸ்ருதிஹாசன், குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், லிசி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் இந்த புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளனர். இந்த போட்டோஷூட் உலகப் புகழ்பெற்ற ரவி வர்மாவின் ஓவியங்களை மாடலாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அன்றைய காலகட்ட ஓவியங்களைப் போன்று தத்ரூபமாகப் புகைப்படம் எடுத்திருக்கும் ஜி.வெங்கட்ராமனுக்கும், அதேபோல போஸ் கொடுத்த நடிகைகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
போட்டோ ஷூட்டில் கலந்து கொண்ட குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மைடியர் ரம்யா கிருஷ்ணன்….உன்னை என் நட்பு வட்டத்தில் இருந்து நீக்கிவிடலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். நீ மிகவும் அழகாக இருக்கிறாய். உன் அழகைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. என்ன செய்வது என்று நீயே கூறு’ என்று தெரிவித்துள்ளார்.

Uncategorized
Comments (0)
Add Comment