கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரித்து அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் ஹமரேஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் ரங்கோலி .
உத்தமர் காந்தி (ஆடுகளம் முருகதாஸ்) சலவை தொழில் செய்து வரும் அவர் தன் மகனை (CBSE) படிக்க வேண்டும் என்பதற்காக குடுமபத்துடன் கடுமையாக உழைக்கிறார். நாயகன் ஹமரேஷ். மாநகராட்சி பள்ளியில் படிக்கும் ஹமரேஷை, (CBSE – Central Board of Secondary Education) பள்ளியில் தந்தைக்காக படிக்கும் நாயகன் , அங்குள்ள சக மாணவர்களால் லோக்கல் என்று சொல்லி கேலிசெய்யப்படுகிறார் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையையும், அவர்களது குடும்பங்களையும் சுற்றிய கதையாக அமைந்துள்ளது இந்த ரங்கோலி திரைப்படம் .
மாநகராட்சி பள்ளியில் தமிழ் மீடியம் மாணவன் இதற்கிடையே,(CBSE ) பள்ளியில் தமிழ் பாடத்தை தவிர மற்ற பாடங்களில் சரியாக படிக்க முடியாமல் திணறும் ஹமரேஷை, அப்பள்ளியில் இருந்து நீக்கும் முயற்சியில் ஆசிரியர் ஈடுபடுகிறார். ஆனால், தமிழ் ஆசிரியரின் ஆதரவால் , ஹமரேஷும் படிப்பில் முன்னேற்றம் அடைகிறார். இந்த சமயத்தில் நாயகனுக்கு காதல் ஏற்பட , சக மாணவர்கள் செய்த செயலால் ஹமரேஷுக்கு பள்ளியில் பிரச்சனை ஏற்பட, அதன் பிறகு அவர் தந்தையின் கனவு நிறைவேறியாத? நாயகனின் காதல் என்னவானது? பள்ளி வாழ்வு என்னவானது? என்பது தான் ரங்கோலி திரை கதை.
நாயகனின் தந்தையாக உத்தமர் காந்தி (ஆடுகளம் முருகதாஸ்), சிறப்பாக நடித்திருக்கிறார். தனது மகன் தனியார் பள்ளியில் படிக்க வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறும் போது வெளிப்படுத்தும் மகிழ்ச்சியும், அதே சமயம், அந்த நிலை அப்படியே மாறும் போது கண் கலங்கும் காட்சியின் முலம் நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்கிறார் உத்தமர் காந்தி .
உத்தமர் காந்தி மனைவியாக நடித்திருக்கும் சாய்ஸ்ரீ, வட சென்னை பெண் கதாபாத்திரத்தில் இயல்பான
நடிப்பின் முலம் ரசிக்கவைக்கிறார், ஹமரேஷின் சகோதரியாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.
மருதநாயகத்தின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்து காட்சிகளை ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறது.இசையமைப்பாளர் சக்ரவர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதையோடு பயணித்திருக்கிறது. பின்னணி இசை திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.
இசையமைப்பாளர் சக்ரவர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதையோடு பயணித்திருக்கிறது. பின்னணி இசை திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.