வடக்குப்பட்டி என்ற கிராமத்தில் தன்னுடைய குடும்ப வறுமையால் சிறுவயதில் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் பானை தொழில் செய்யும் ராமசாமி (சந்தானம்). ஊரே காட்டேரி என்று பயந்து துரத்திவர எதிர்பாராத தருணத்தில் தற்செயலாக சந்தானத்தில் பானையால் வீழ்த்தப்படுவதால், கிராம மக்கள் அந்த பானையையே அம்மனாக வழிபட தொடங்குகின்றனர். மக்களின் நம்பிக்கையை மூலதனமாக்கி, அந்த பானையை வைத்து கோயிலை கட்டி அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார் ராமசாமிக்கு புதிய பிரச்சனை தொடங்குகிறது திரைப்படத்தின் இரண்டாவது பத்தியில் . வடக்குப்பட்டிக்கு தாசில்தாராக வரும் தமிழ்க்கும் மற்றும் சந்தானத்தின் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை அபகரிப்பதில் இவர்களுக்கு இடையே நடக்கும் மோதலில் கோயில் சீல் வைக்கப்படுகிறது. கோயில் மீண்டும் திறக்கப்பட்டதா? ‘வடக்குப்பட்டி ராமசாமி’ தனது எதிரிகளை எப்படி எதிர்கொண்டர் ? என்பதை நகைச்சுவையுடன் திரையில் ரசிக்கவைத்துள்ளது ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் .
கோவிலை திறக்க ராமசாமி என்னவெல்லாம் செய்கிறார் என்பதை திரையில் ரசிக்கும் படியாக திரைக்கதை அமைத்து இயக்குநர் கார்த்திக் யோகி தியேட்டரில் இருப்பவர்களை எல்லாம் சிரிக்க வைத்திருக்கிறார் .
ஷான் ரோல்டனின் பின்னணி இசை திரைப்படத்துக்கு பலம் சேர்த்துள்ளது . தீபக்கின் ஒளிப்பதிவு திரையில் ரசிக்கும்படியாக உள்ளது , சிவனாண்டீஸ்வரனின் எடிட்டிங், ராஜேஷின் கலை இயக்கம் என அனைத்தும் மிக சிறப்பு .