‘கள்வன்’ திரை விமர்சனம்

‘கள்வன்’ திரை விமர்சனம்-indiastarsnow.com
சத்திய மங்கலம் பகுதியில் உள்ள கிராமத்தில் அனாதை வாலிபர்கலக நாயகன் (கெம்பன்)ஜி.வி.பிரகாஷ் குமார், தனது நண்பர் தினாவுடன் சேர்ந்து திருடுவது மற்றும் மது அருந்துவது என்று வாழ்ந்து வருகிறார் அப்படி ஒருநாள் நாயகியின் வீட்டில் திருட செல்கின்றனர் அப்போது நாயகி எங்கள் வீட்டில் பெரியவர்கள் வெளி ஊர்க்கு சென்றுள்ளதால் இங்கிருந்து தல வாசல்வழியாக சென்ட்ரல் என்னை தப்பாக நினைப்பார்கள் எனவே நன் சொல்லும் வழியாக சென்ட்ரல் சுலபமாக தப்பித்துவிடலாம் என்று யோசனை சொல்ல அதனை நம்பி குடிப்பதற்கு நொறுக்குத்தீனி எடுத்துக்கொண்டு நாயகி சொல்லும் வழியாக செல்ல தப்பிக்க முடியாத மிக பெரியா சுவர் உள்ளதை உணர்கின்றனர் அப்போது நாயகி போலீசுக்கு தகவல் கொடுத்து நாயகனை மாட்டிவிடுகிறார் அனல் நாயகியின் அப்பா திருடர்களை வெட்டுவிடுமாறு போலீஸ் இடம் சொல்கிறார் அவர்களும் போலீசும் அவர்களை விட்டு செல்கின்றனர் மறுநாள் நாயகி இவானாவை (நர்ஸிங் படிக்கும்) சந்திப்பவர் அவர் மீது காதல் கொள்கிறார். ஆனால், ஜி.வி-யின் காதலை இவான நிராகரிக்க, அவரை விடாமல் துரத்துபவர் ஆதரவற்ற முதியவர் இல்லத்தில் இலவச மருத்துவ முகாமிற்கு வரும் நாயகியை பின்தொடர்ந்து வருகிறார் அப்போது ஆதரவற்ற முதியவர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜாவை தத்தெடுக்கிறார் அதன் பின்னணி காதலுக்காக தான் ஆதரவற்ற முதியவரை ஜி.வி.பிரகாஷ் குமார் தத்தெடுத்தார், என்று அவரது நண்பர் நினைக்கும் போது. தத்தெடுப்புக்கு பின்னணியில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் அதிர்ச்சியளிக்கும் திட்டம் பற்றி தெரிய வருகிறது. அது என்ன? என்பதையும், அவரது திட்டமும், காதலும் நிறைவேறியதா? என்பதை சொல்வது தான் ‘கள்வன்’.
ஜி.வி.பிரகாஷ் “கெம்பன்” என்ற கதாபாத்திரமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார் கொங்கு தமிழ் பேசி . திருடுவது, மது அருந்துவது என்று வழக்கமான ஜி.வி.பிரகாஷாக ஆரம்பத்தில் வலம் வந்தாலும், காதல் நிராகரிப்படும் போது கலங்கும் காட்சிகளில் சிறந்த நடிப்பின் உச்சம் , பாராதிராஜாவை வைத்து போடும் திட்டத்தால் வில்லத்தனமான நடிப்பையும் வெளிக்காட்டி மிரட்டுகிறார் ஜி.வி.பிரகாஷ் “கெம்பன்” .

நாயகியாக இவானா, சிரித்த முகத்தோடு ரசிகர்களை கவர்கிறார். இயல்பான நடிப்பு மூலம் கதையோட்டத்துடன் பயணிப்பவர், திருடனின் காதலை ஏற்க மறுத்து, கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், தனது காதலனின் சுயரூபம் தெரிந்த பிறகு கோபமடையும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆதரவுஅற்ற முதியவராக பாரதிராஜா தனது நடிப்பினை சிறப்பாக திரையில் ரசிக வைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ் “கெம்பன்” தாத்தாவாக பாரதிராஜாவை தத்தெடுக்கப்பட்ட பிறகு அதிகாரம் செய்து பேரன்களை அசரடிப்பது மற்றும் புலியை பார்வையால் விரட்டுவது, மலையாளத்தில் பேசி யானையை அடிப்பணிய செய்வது என்று தன் கதாபாத்திரம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துபவர், தனிமையின் தவிப்பு பற்றி பேசி வருந்தும் காட்சியில், நடிப்பால் திரையில் காண்போரை கலங்க வைத்துவிடுகிறார் பாரதிராஜா.

ஜி.வி.பிரகாஷின் நண்பராக நடித்திருக்கும் தினா, படம் முழுவதும் குணச்சித்திர நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார் தினா.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் புத்துணர்ச்சியை கொடுக்கும் விதமாக அமைந்திருக்கிறது. ரேவாவின் பின்னணி இசை கதையோட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளராக வனப்பகுதியை சிறப்பாக காட்டியிருக்கிக்கிறார் பி.வி.சங்கர். அதே சமயம், இறுதி கட்சியில் நாயகனை யானை துரத்தும் காட்சியை திரையில் ரசிக்கும் விதம் மகா உள்ளது.

ரேட்டிங் 3/5

Uncategorized