KOLAISEVAL MOVIE Review

கொலைச்சேவல் திரை விமர்சனம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் உள்ள ஜவ்வாது மலைப்பகுதி கிராமத்தைச் சேர்ந்தவர் காளி (கலையரசன்). அவரும் அனுசூயாவும் (தீபா பாலு) சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.  அனுசுயா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். தங்கள் குடும்ப வழக்கப்படி, கர்ப்பமாக இருக்கும் பெண் தனது ஒன்பது மாதங்களில் ஊர் எல்லையில்‘நிறைசூலி’ குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்பது ஐதீகம். இதற்காகத் தனது குடும்பத்தினருடன் நிறைசூலி கோவிலுக்கு பயணப்படுகிறார்கள். காளியின் குடும்பத்தினர் முன்னே செல்ல, காளியும் அனுசுயாவும்  பின்னால் வருகிறார்கள் அங்கு குடும்பதுடன் மகிழ்சியாக சாமி தரிசனம் செய்து வீடு திரும்பினார் அப்போது நாயகியின் அப்பா மற்றும் தம்பி மற்றும் மாமா & நண்பர்கள் இணைந்து நாயகி மற்றும் நாயகன் கொலை செய்ய முயற்சி செய்கின்றனர் தில் இருந்து தப்பித்தாரா.

சாதி வெறியன் தொடக்கமாக கௌரவ கொலைகள் பல்வேறு இடங்களில் இன்று நடந்தேறி  வருகிறது அதில் நிறைvமாத  கர்ப்பிணியை  தூக்கி வளர்த்த அப்பாவே கௌரவ கொலை  செய்வதை  காணும் பொழுது மனிதர்குல் உள்ள மிருகத்தை காணமுடிகிறது.

அடர்ந்த வனப்பகுதியில் மனித மிருகங்களிடம் சிக்கிக் கொள்ளும் காதலர்களின் நிலை என்ன?

நாயகி தூக்கி வளர்த்த அப்பாவே கொள்வதை பார்க்கும் பொழுது மனிதருக்குள் கௌரவம் என்ற மிருகம் இருப்பதை காண முடிகிறது?

மனித மிருகங்களிடம் இருந்து காதலர்கள் உயிர் தப்பித்தார்களா இல்லையா என்பதை படத்தின் கொலைச்சேவல் திரைக்கதை.

நிறைய திரைப்படங்களில் நண்பராக நடிக்கும் பால சரவணன் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், தனது கதைக்கு தேவையான நட்பை கொடுத்து குணச்சித்திர நடிகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் திரையில் காண்பவரை ரசிக்க வைத்துள்ளோம்.


நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் ஆதவ் சந்திரா சாதி வெறிபிடித்த (மனித மிருகமாக) கொடூரமான வில்லனாக தனது நடிப்பின் மூலம் திரையில் காண்பவரை சிந்திக்க வைத்துள்ளார் நடிகர் ஆதவ் சந்திரா .

கொலைச்சேவல் திரைப்படத்தில் உள்ள நடிகர்கள் விஜய் சத்யா, அகரன் வெங்கட், விஜயலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை உட்பட அனைவரும் இந்த மண் சார்ந்த மக்களாகவே வாழ்ந்து, திரை கதைக்கு நடிப்பின் மூலம் உயர் கொடுத்து உள்ளனர்.